Monday, December 24, 2007

ஆழ்வார் திருநகரில் இலவச கண் சிகிச்சை மற்றும் பல் மருத்துவ முகாம்


தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் தமுமுகவும் பெஜான்சிங் கண் மருத்துவமனை மற்றும் ஆர்.எம்.ஆர் பல் மருத்துவமனையும் இணைந்து ஆழ்வார்திருநகரி மீரானிய நடுநிலைப்பள்ளியில் டிசம்பர் 23 ஆம் நாளன்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி சிறப்புரையாற்றினார். ஜே. கிதுரு முஹம்மது மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர், மாவட்டச் செயலாளர் ஆஸாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். ஒன்றிய, நகர மற்றும் கிளை நிர்வாகிகளும் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.




No comments: